யோகா

ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் உன்னத பணியால்
பயன் பெற்றோர் சுமார் 2000 கும்பங்கள்
பயபெற்றுகொண்டிருப்போர் ஏராளம்
நோயில்லா மருந்தற்ற உன்னத வாழ்வை யோக முறையில் பெற வாருங்கள் பயன்பெறுங்கள்

free web counter
அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது

யோகாவில் உணவு முறை :

       உலகில் உள்ள பெரும்பான்மையான மனிதர்களுக்கு யோகா  என்றொரு லை உள்ளது தெரியும். யோகாவினால் உடலும் ஆரோக்கியமும், மன அமைதியும் பெறலாம் என்பதும் தெரியும். விபரம் தெரிந்தவ ர்களில் பெரும்பான்மையானோர் யோகா கற்றுக்கொள்ள விரும்பாதது யோகாவில் உள்ள உணவு மற்றும் பழக்க வழக்க கட்டுப்பாடுகள் தான் என்பதில் வேறு கருத்தில்லை.

      உணவுமுறை என்று வரும்பொழுது மனிதனைப் போல் ஒரு முறைதவறிய உணவு பழக்கமுள்ள பிறப்பு உலகில் வேறில்லை. உதாரணமாகச் சொன்னால் உலகில் தாவரப்பச்சினி, மாமிசப்பச்சினி என்று உள்ளன. இந்த வகைப்பாட்டை அந்தந்த விலங்கினங்கள் மீறியதில்லை. புல் திண்பவை புல் திண்றும்  புலால் திண்பவை புலால் தின்றும் ஒரு மாறா நெறியினை உணவு பழக்க வழக்கத்தில் கடைபிடிக்கின்றன. ஆனால் ஆறாவது அறிவின் சபலத்தினாலோ (சாபத்தினாலோ) என்னவோ தன் உடல் எந்த உணவை செறிக்க தகுதியானது என்று பெரும்பான்மையினருக்கு தெரிவதில்லை. மனிதன் ஓர் தாவாரப்பச்சினி தான் என்பதில் இருவேறு கருத்தில்லை. மனிதன் தன் முதல் உணவாக பழங்களைத்தான் உண்டான் என்ற கூற்றும் உண்டு.

      ஆக விளக்க வேண்டியதும் இவ்வளவுதான். எல்லோரும் உணர வேண்டியதும் இவ்வளவுதான்.

      "கடவுள் படைத்த இந்த உடலையும், ஆன்மாவையும் பயன்படுத்திக்கொள்ளவே நமக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பாழ்படுத்தும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை".

      கடவுள் தந்த இந்த ஆன்மாவையும் உடலையும் நான் எப்படி பாதுகாப்பது...? இந்த கேள்விக்கான பதிலாக கடவுள் நமக்கு அருளியதுதான் "யோகா".
     
      நோய்நொடியில்லாமல் உடலை காப்பதற்கான அத்தனை அத்தியாவசியமானவைகளை யும் யோகாவினால் மனிதன் தன் உடலில் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

      யோகாவினால் கடவுளை உணரலா(ம்)மா? என்றால் தன்னை ஓர் முழு மனிதனாய் தாமே உணரலாம்.

      சைவ உணவும் முறையான வாசி (மூச்சி) பயிற்சியும் சேர்கையில் மன நெருக்கடியற்ற, உடலும் மனமும் செழித்த வாழ்க்கை வாழலாம்.
     
      கண்டதை உண்று காலம் நூறு சிலரால் கடக்க முடியும். ஆனால் உபாதையினை உடலில் சேர்க்காமல் கடக்க முடியுமா?

0 Response to "யோகாவில் உணவு முறை :"

Post a Comment